Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருநாயிடம் பேசிய மன்சூர் அலிகான்.,. வித்தியாசமான பிரச்சாரம்!

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (16:50 IST)
கோவை தொண்டாமுத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட மன்சூர் அலிகான் தெருநாயின் அருகே அமர்ந்து பேச ஆரம்பித்தார்.

தமிழ் சினிமா நடிகரான மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்த நிலையில் முந்தைய தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர். இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியில் சீட் வழங்கப்படாத நிலையில், கட்சியிலிருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார்.

இந்நிலையில் தற்போது கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் சுயேச்சையாக போட்டியிட மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார். அதையடுத்து  இன்று அந்த பகுதியில் அவர் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது அங்கே உள்ள மக்களிடம் பேசி பிரச்சனைகளைக் குறித்துக் கொண்டார். அப்போது அங்கே சுற்றிக்கொண்டிருந்த தெருநாய் ஒன்றின் அருகே அமர்ந்து பேச ஆரம்பித்தார். கடந்தமுறை திண்டுகல்லில் அவர் போட்டியிட்ட போதும் அவர் இதுபோன்ற கவன ஈர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் புத்துணர்ச்சி பெறும் சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படம்.. இசையமைப்பாளர் இவரா?

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர், தயாரிப்பாளர் யார்? புதிய தகவல்..!

சினிமாவுக்கு வரும் ஷங்கர் மகன்.. உதயநிதி மகன்.. இயக்குனர்கள் யார் யார்?

நான் விளம்பரம் செய்தது கேமிங் செயலிகளுக்கு மட்டுமே.. அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் விஜய் தேவரகொண்டா பேட்டி..

கருநிற உடையில் கண்குளிர் போட்டோஷூட்டை நடத்திய திவ்யபாரதி!

அடுத்த கட்டுரையில்
Show comments