Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அட, மணிரத்னம் நன்றி எல்லாம் சொல்றாருப்பா

அட, மணிரத்னம் நன்றி எல்லாம் சொல்றாருப்பா
, செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (09:36 IST)
மீடியாவின் பக்கமே தலைகாட்டாத மணிரத்னத்தை, ஓ காதல் கண்மணி நிறையவே மாற்றியிருக்கிறது. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தாராளமாகவே பேசினார். தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு பேட்டி தந்தார். டாக் ஷோ நிகழ்ச்சியில் ரஹ்மான், வைரமுத்து, துல்கர் சல்மான் ஆகியோருடன் கலந்து கொண்டார்.
 
உச்சபட்சமாக, படத்தின் வெற்றிக்கு ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
 
அன்பு மற்றும் வெறித்தனத்துடன் நீங்கள் வெளியிட்டுள்ள விமர்சனங்களுக்கு நன்றி. இத்தனை வருட எனது கலைப்பயணத்தில் நீங்களும் ஒரு அங்கமாக இருந்து வருகிறீர்கள். இனி வரும் காலங்களிலும் நீங்கள் தொடர்ந்து உங்கள் அன்பையும், ஆதரவையும் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என அந்தக் கடிதத்தில் மணிரத்னம் குறிப்பிட்டுள்ளார்.
 
மணிரத்னம் நன்றிக் கடிதம் எழுதுவது இதுதான் முதல்முறை என்பதே ஆச்சரியத்துக்கு காரணம்.

Share this Story:

Follow Webdunia tamil