பொதுவாக ஹாலிவுட்டில் நடிகர், நடிகை சந்தித்து கொண்டால் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த பழக்கம் பாலிவுட்டுக்கும் தாவியது.
அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் நடிகர்களும் அதை கொஞ்சம் கொஞ்சமாக பின்பற்றி வருகின்றனர். முக்கியமாக இளைய நடிகர்கள், யாரை பார்த்தாலும் கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால், சிலர் எளிமையாக வணக்கம் கூறுவது, கை கொடுப்பது என்று நாசுக்காக தவிர்த்து விடுகிறார்கள். முக்கியமாக சில மூத்த நடிகர்களின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற 63வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில், மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இருக்கையில் அமர்ந்திருந்த மம்முட்டிக்கு அருகில் நடிகை நயன்தாரா வந்து அவருக்கு கை கொடுத்தார். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை. மம்முட்டி சிரித்த முகமாக இல்லாமல் இறுக்கமான முகத்துடன் இருந்தார்.
எனவே, நயன்தாராவிற்கு கை கொடுக்காமல், வணக்கம் கூறினார். ஆனாலும் விடாத நயன் விடாமல் அவரின் கைகளைப் பற்றி குலுக்கி விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
சமீபத்தில்தான் ‘புதிய நியமம்’ என்ற படத்தில் அவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்கள். என்னதான் நாகரீகத்தை கடைபிடித்தாலும், நயன்தாராவோடு கை குலுக்குவதில் மம்முட்டி என்ன பிரச்சனையோ!