ஒருகாலத்தில் பேபி ஷாம்லியாக ரசிகர்களை கவர்ந்த ஷாம்லி தெலுங்கில் ஒரேயொரு படத்தில் நாயகியாக நடித்தார்.
அந்தப் படம் புட்டுக் கொள்ள, படிப்பில் கவனம் செலுத்தினார். கேமரா முன் நின்றவர்களால் அதனை கடைசிவரை மறக்க முடியாது. ஷாம்லியும் நடிக்க வருகிறார்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவர் ஷாம்லி. விக்ரம் பிரபுவின் வீர சிவாஜியுலும் அவரே நாயகி. இந்த இரு படங்களுக்கும் முன்னால் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க ஷாம்லி ஒப்புக் கொண்டுள்ளார்.
குஞ்சாகா போபன் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் (படத்தின் பெயர் வள்ளியும் தெற்றி புள்ளியும் தெற்றி) ஷாம்லி நாயகி. ஷாலினி நாயகியாக அறிமுகமான மலையாள அனியத்தி புறாவு படத்திலும் குஞ்சாகா போபன்தான் நாயகன் என்பது குறிப்பிடத்தகது.