Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜமெளலிக்காக அடித்துக் கொள்ளும் ஹீரோக்கள்

Webdunia
புதன், 12 ஜூலை 2017 (18:21 IST)
ராஜமெளலியின் அடுத்த படத்தில் யார் நடிப்பது என தெலுங்கு நடிகர்களுக்குள் அடிதடியே நடக்கிறதாம்.


 
 
‘பாகுபலி’ என்ற ஒற்றைப் படத்தின் மூலம் பலரையும் வசியம் செய்துவிட்டார் எஸ்.எஸ்.ராஜமெளலி. அவருடைய அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க, ஏகப்பட்ட நடிகர்கள் போட்டி போடுகின்றனர். நடிகர்களைவிட, அவர்கள் ரசிகர்களின் போட்டிதான் பலமாக இருக்கிறது. குறிப்பாக, ஜூனியர் என்.டி.ஆர். ரசிகர்களும், மகேஷ் பாபு ரசிகர்களும், ‘அடுத்து எங்கள் ஹீரோதான் ராஜமெளலி படத்தில் நடிக்கப் போகிறார்’ என சமூக வலைதளங்களில் சண்டையிட்டு வருகின்றனர்.
 
இன்னொரு பக்கம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் மூன்று மொழிகளிலும் ‘பாகுபலி’ சூப்பர் ஹிட் என்பதால், அடுத்த படத்தை மூன்று மொழிகளிலும் ராஜமெளலி எடுக்கப் போகிறார் என்கிறார்கள். அப்படியானால், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழி ஹீரோக்களையும் வைத்து அடுத்த படத்தை எடுப்பார் என்று இவர்களாகப் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், தன்னுடைய அடுத்த படம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் அமைதி காக்கிறார் ராஜமெளலி.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments