Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவியை விவாகரத்து செய்தார் மாரி பட இயக்குனர்

மனைவியை விவாகரத்து செய்தார் மாரி பட இயக்குனர்
, வெள்ளி, 6 மே 2016 (16:20 IST)
மாரி பட இயக்குனர் பாலாஜி மோகன் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.  


 

காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் பாலாஜி மோகன். தொடர்ந்துவாயை மூடி பேசவும், மாரி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இவர் அருணா என்ற பெண்ணை கடந்த ஜுலை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரச்சனையால் பிரிந்து வாழ ஆரம்பித்தனர்.

இந்நிலையில் பாலாஜி மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;

என் நண்பர்கள், நலம் விரும்பிகள், ஊடக நண்பர்கள் என அனைவருக்கும் எனது விவாகரத்து குறித்து கூற விரும்புகிறேன். என் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகள் முன்பே பிரிந்துவிட்டேன், தற்போது எனது முன்னாள் மனைவியின் சம்மதத்துடன் விவகாரத்து  மூலம் திருமணம் உறவு முடிவடைந்துவிட்டது என்று பாலாஜி மோகன் கூறியுள்ளார். மேலும் இது ஒரு சுகமான பிரிவு என்றும், இருவரும் அவரவர் வழியில் சென்று விட்டோம் என்றும் கூறியுள்ளார்.



Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படிப்புக்குப் பிறகுதான் நடிப்பு