Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிஞர் சினேகன் கார் மோதி இளைஞர் காயம் – வழக்குப்பதிவு!

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (11:20 IST)
சினிமா பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவருமான சினேகனின் கார் மோதி இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின்போது கமல்ஹாசனுக்கு நெருக்கமான சினிமா பாடலாசிரியர் சினேகன், அதன்பின்னர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சியில் இணைந்து நிர்வாகியாகவும் மாறினார். இந்த நிலையில் தற்போது அவருக்கு கமல்ஹாசன் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் பதவியை வழங்கியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம்  சவேரியாபுரம் மற்றும் திருமயத்துக்கு இடையே சினேகன் சென்ற கார் மோதி மோட்டார் சைக்கிளில் வந்த அருண் பாண்டி என்ற இளைஞர் மேல் மோதியதால் அவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். திருமயம் போலீஸார், 2 பிரிவுகளின் கீழ் சினேகன் மீது நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர் மோகன்லால்.. செல்வராகவன் பாராட்டு!

பாடகர் எஸ்பிபி நினைவிடத்திற்கு யாரும் வரவேண்டாம்.. மகன் எஸ்பிபி சரண் கோரிக்கை..!

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments