லிங்கா படம் வெளியான இரண்டாவது நாளே திருட்டு சி.டி.களும் புழக்கத்தில் வந்துவிட்டன. போலீஸ் கெடுபிடி காரணமாக பல இடங்களில் சி.டி. விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நாட்டு நடப்பு எதுவும் வேன் டிரைவர் திண்டுக்கல் மதனகோபாலுக்கு தெரியாது போலும். மதுரை வீதிகளில் தனது வேனில் லிங்கா சி.டி.யை சத்தமாக அலறவிட்டு ஓட்டியிருக்கிறார். இதைப் பார்த்தவர்கள் போலீஸுக்கு தகவல் சொல்ல, வேனை மடக்கி சோதனைப் போட்டிருக்கிறார்கள்.
வேனில் லிங்கா திருட்டு சி.டி.யில் ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. உடனே வேனை கைப்பற்றியதோடு மதனகோபாலின் கைக்கும் காப்பும் மாட்டியிருக்கிறார்கள்.