Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிங்கா - அடாது மழையிலும் விடாது படப்பிடிப்பு

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2014 (15:52 IST)
லிங்கா படத்தை எப்படியும் சொன்ன தேதியில் வெளியிடுவது என்பதில் கே.எஸ்.ரவிக்குமார் உறுதியாக இருக்கிறார். மழை நாளிலும் படப்பிடிப்பை நடத்தியதாக கர்நாடகாவிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஜோ‌க் அருவியில் லிங்காவின் படப்பிடிப்பு நடந்து வந்தது. கடந்த நான்கைந்து நாள்களாக மழை விடாது பெய்து வருகிறது. படப்பிடிப்புக்கு தேவையான சூரிய ஒளியும் கிடையாது. இந்த இக்கட்டான நிலையிலும் படப்பிடிப்பை நிறுத்தவில்லையாம் ரவிக்குமார். இதே வேகத்தில் போனால் இன்னும் பத்து தினங்களுக்குள் இந்த ஷெட்யூல்ட் முடிந்துவிடும்.

அதன் பிறகு க்ளைமாக்ஸ். அதற்கு ஒரு பத்து தினங்கள். அதன் பிறகு இரு பாடல் காட்சிகள். ஈரோப்பிலுள்ள ஏதாவது நாட்டுக்கு செல்வதென்று முடிவு செய்துள்ளனர்.

எப்படியும் டிசம்பர் 12 ரஜினியின் பிறந்த நாளுக்கு படம் வெளிவந்துவிடும் என்கிறார்கள் உறுதியாக.

விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது: பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு ரஜினி வாழ்த்து!

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

Show comments