பிக்பாஸுக்கு அழைத்த விஜய் டிவி - பொங்கியெழுந்த லட்சுமி ராமகிருஷ்ணன்
, செவ்வாய், 4 ஜூலை 2017 (12:09 IST)
பிக்பாஸ் போட்டியில் பங்கு பெறும் ஒருவராக தனக்கு அழைப்பு வந்ததாகவும், அதை தான் மறுத்துவிட்டதாகவும் பிரபல நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும், சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் போட்டியில் பங்கு பெறும் ஒருவராக இவருக்கு அழைப்பு வந்தது. ஆனால் அதை அவர் மறுத்துவிட்டார்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அவர் “பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள். என் குடும்பத்தை என்னால் எப்படி செல்ல முடியும். மேலும், தற்போது ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் அதற்கான கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன். படங்களில் நடிக்க வேண்டியுள்ளது. ஒருவரை அழைப்பதற்கு முன் அவரின் பேக்ரவுண்ட் என்னவென பார்க்க மாட்டீர்களா? எனக் கேட்டேன். ரூ.10 கோடி கொடுத்தாலும் என்னால் பிக்பாஸ் போட்டியில் பங்கு பெற முடியாது எனக்கூறிவிட்டேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்