Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்கட்பிரபு காணாமல் போய்விட்டார்… பிரபல நடிகரின் சர்ச்சை பதிவு!

vinoth
செவ்வாய், 30 ஜனவரி 2024 (14:15 IST)
இயக்குனர் வெங்கட்பிரபு மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்த படமாக இப்போது கிச்சா சுதீப் நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த படத்தை தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் உருவாக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

இதை நடிகர் கிச்சா சுதீப்பும் உறுதி செய்திருந்தார். அவர் அளித்த ஒரு நேர்காணலில் ‘எனது அடுத்த படத்தை மங்காத்தா மற்றும் மாநாடு ஆகிய படங்களை இயக்கிய வெங்கட்பிரபு இயக்குகிறார். எனக்கான நல்ல கதைகள் எனது மாநிலத்திலும் அண்டை மாநிலங்களில் இருந்தும்தான் வருகின்றன’ எனக் கூறியிருந்தார்.

ஆனால் வெங்கட்பிரபு கஸ்டடி மற்றும் கோட் என அடுத்தடுத்து தன்னுடைய வேறு படங்களில் கமிட்டாகி வருகிறார். இதனால் கிச்சா படத்தை இன்னும் அவர் தொடங்கவில்லை. இதுகுறித்து ரசிகர் ஒருவர் கிச்சாவிடம் எக்ஸ் தளத்தில் “வெங்கட்பிரபு உடனான படம் எப்போது தொடங்கப்படும்?” எனக் கேட்க, அதற்கு கிச்சா “வெங்கட் பிரபு காணாமல் போய்விட்டார்” என பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லப்பர் பந்து படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் ஷாருக் கான்!

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’!

சக்திமான் படத்தில் இருந்து விலகினாரா ரண்வீர் சிங்.. பின்னணி என்ன?

லாரன்ஸின் ‘பென்ஸ்’ படத்தில் இணைந்த பிரபல நடிகை..!

ஹரிஹர வீரமல்லு படத்தில் நான்தான் கதாநாயகி… சத்யராஜ் ‘கலகல’ பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments