Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை ராசியில்லாத நடிகை என முத்திரைக் குத்தினார்கள்… கீர்த்தி சுரேஷ் வேதனை!

vinoth
திங்கள், 11 நவம்பர் 2024 (12:36 IST)
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கதாநாயகியாகவும் நடிக்கத் தொடங்கினார். தமிழில் அவரின் முதல் படம் ஏ எல் விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ திரைப்படம்தான். அதன் பின்னர் வெளியான ரஜினி முருகன் படம் அவரை முன்னணி நடிகையாக்கியது.

இப்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் வைத்திருக்கும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள அவர் இடையில் நடிகையர் திலகம் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். அதன் பின்னர்  பெண்குயின், சாணிக் காயிதம் மற்றும் ரகு தாத்தா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கதைகளிலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் சினிமாவில் தன்னுடைய ஆரம்பகாலம் குறித்து பேசியுள்ள அவர் “நான் முதலில் ஒரு மலையாள படத்தில் நடிக்கதான் ஒப்பந்தம் ஆனேன். என் அம்மா போல நடிகை ஆகப் போவதை எண்ணி மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் நான் ஒப்பந்தம் ஆன வேறு இரண்டு படங்களும் பாதியிலேயே கைவிடப்பட்டன. இதனால் என்னை ராசியில்லாத நடிகை என்று முத்திரைக் குத்தினார்கள். அதை நினைத்தால் எனக்கு வேதனையாக இருக்கும். அது குறித்து பிரச்சாரமும் செய்தனர்.ஆனால் நான் முயற்சியைக் கைவிடவில்லை. தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகையாக உயர்ந்தேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments