Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு இருக்கும் சூழலைப் பார்க்கும் போது - பத்திரிக்கையாளர் சந்திப்பில் கவனம் ஈர்த்த கீர்த்தி பாண்டியன்!

vinoth
செவ்வாய், 23 ஜனவரி 2024 (07:40 IST)
ஜனவரி 25 ஆம் தேதி பா ரஞ்சித் தயாரித்துள்ள அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜெயக்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.

அப்போது படத்தில் நடித்துள்ள கீர்த்தி பாண்டியன் பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அவர் பேசும்போது “2022 ஆம் ஆண்டு இந்த படம் தொடங்கியது. இயக்குனர் கதை சொன்னதும் எனக்குப் பிடித்ததால் நடித்தேன். பா ரஞ்சித் படத்தைத் தயாரிக்கிறார் என்றதுமே எல்லோரும் என்ன அரசியல் பேச வந்துவிட்டீர்களா எனக் கேட்டனர். அரசியல் பேசினால் என்ன தவறு. நம் வாழ்க்கையில் அரசியல் உள்ளது. நாம் பேசாமல் இருப்பதால் நம் வாழ்க்கையில் அரசியல் இல்லை என்று அர்த்தம் இல்லை. நீங்கள் தவிர்க்கிறீர்கள் என்று அர்த்தம்.

எல்லா படங்களிலும் அரசியல் இருக்கிறது. பா ரஞ்சித் பேசும் விஷயங்கள் முக்கியமானவை. நாடு இருக்கிற சூழலைப் பார்க்கும்போது அறிவு எழுதிய பாடலான “காலு மேல காலு போடு ராவண குலமே” என்று பாட தோன்றுகிறது” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?.. முன்பதிவில் சுணக்கம்!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments