Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.5 கோடி மோசடி: பிரபல தொகுப்பாளினி கணவர் மீது புகார்...

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (17:46 IST)
பிரபல தொகுப்பாளினி அஞ்சனாவின் கணவரும் நடிகருமான கயல் சந்திரன் ரூ.5 கோடி மோசடி செய்துள்ளதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது என செய்திகல் வெளியாகியுள்ளது. 
 
கயல் படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானார் சந்திரன். தற்போது திட்டம்போட்டு திருடுற கூட்டம், பார்ட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் மீது தயாரிப்பாளர் பிரபு என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் மோசடி புகார் கொடுத்துள்ளார்.
 
அந்த மனுவில் பின்வருமாரு குறிப்பிடப்பட்டுள்ளது, கயல் சந்திரன் மற்றும் ரகுநந்தன் இருவரும் நாங்கள் திட்டம்போட்டு திருடுற கூட்டம் படம் தயாரிக்கிறோம், நீங்கும் பங்கேற்க வேண்டும் என்றார்கள். நானும் ஒப்புக்கொண்டு ரூ.5 கோடி பணம் கொடுத்தேன்.
 
ஆனால், படம் ரிலீஸாகும் நிலையில் படத்தின் தயாரிப்பாளர் என்கிற தகுதியில் இருந்து என்னை நீக்கிவிட்டனர். மேலும், கடந்த ஒரு வருடமாக பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார்கள். எனவே அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments