Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவியத்தலைவன் கே.பி.சுந்தராம்பாளின் காதல் கதை கிடையாது

Webdunia
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2014 (09:51 IST)
வசந்தபாலன் காவியத்தலைவன் படத்தை ஆரம்பிக்கும் முன்பே அப்படம் கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பாவின் காதல் கதை என்றொரு பேச்சு இருந்தது. அதனை வசந்தபாலன் மறுத்துள்ளார்.

காவியத்தலைவன் கே.பி.சுந்தராம்பாள் - கிட்டப்பா காதல் கதை கிடையாது. மதுரையை பின்னணியாகக் கொண்ட இரு நாடகக் கம்பெனிகளைப் பற்றியது. அதிலும் முக்கியமாக ஒரே வயதையொத்த இரு திறமையான நடிகர்களின் வாழ்க்கையை பற்றியது என்றார்.

இந்தப் படத்தின் நாயகன் சித்தார்த். தலைவன்கோட்டை காளியப்பா பாகவதர் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். பிருத்விராஜுக்கு மேலசீவல்பேரி கோமதி நாயகம் பிள்ளை என்ற கதாபத்திரம். இவர்கள் இருவரின் குருவாக நாசர் தவத்திரு சிவதாஸ் சுவாமிகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இது தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளை ஞாபகப்படுத்தக் கூடிய கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேதிகாவின் ஞானகோகிலம் வடிவாம்பாள் கதாபாத்திரம் கே.பி.சுந்தராம்பாளை நினைவுப்படுத்தும் என வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments