கவலை வேண்டாம், ரெமோ மோதுவது உறுதி
கவலை வேண்டாம், ரெமோ மோதுவது உறுதி
ஜீவாவின் கவலை வேண்டாம் படமும், சிவகார்த்திகேயனின் ரெமோ படமும் மோதுவது உறுதியாகியுள்ளது.
அக்டோபர் 7 -ஆம் தேதி ரெமோவை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். ஐந்து தினங்கள் தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் அதனை பயன்படுத்திக் கொள்ள தயாரிப்பாளர்கள் நினைப்பது இயல்பு. அதேநாளில் தனது, கவலை வேண்டாம் படத்தையும் வெளியிடுவதாக எல்ரெட் குமார் அறிவித்துள்ளார்.
ரெமோ அக்டோபர் 7 வெளியாவதால் கவலை வேண்டாம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், திட்டமிட்டபடி அக்டோபர் 7 படம் திரைக்கு வரும் என்று உறுதியளித்துள்ளார், படத்தை இயக்கியிருக்கும் டிகே.
ஜீவா, காஜல் அகர்வால், நிக்கி கல்ராணி, பாபி சிம்ஹா, சுனைனா ஆகியோர் கவலை வேண்டாம் படத்தில் நடித்துள்ளனர்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்