Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்திரன் 2 - ஹீரோயின் கத்ரினாவா? தீபிகாவா?

எந்திரன் 2 - ஹீரோயின் கத்ரினாவா? தீபிகாவா?
, சனி, 18 ஜூலை 2015 (12:31 IST)
எந்திரன் இரண்டாம் பாகத்துக்கான வேலையை ஷங்கர் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார். நாயகனாக ரஜினி. வில்லனுக்குதான் ஆள் வேண்டும். கமல் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்ற பேராசை இருக்கிறது ஷங்கருக்கு. அப்படியெனில் எந்திரன் 2 குறித்த அவரது பிரமாண்ட சித்திரம் எப்படியிருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.
எதைச் சொன்னாலும் கேள்வி கேட்காமல் செய்கிற விக்ரம்தான் இப்போதைக்கு வில்லனாக டிக் செய்யப்பட்டிருப்பவர். இது எப்போது வேண்டுமானாலும் மாறலாம். நாயகி இந்தி நடிகையாக இருந்தால் படத்தை இந்தி பேசும் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது எளிது. கத்ரினா கைப் அல்லது தீபிகா படுகோன் இருவரில் ஒருவர்தான் ஷங்கரின் தேர்வு.
 
மற்றபடி தொழில்நுட்பக் கலைஞர்கள் எந்திரனில் பணியாற்றியவர்கள்தான், ரஹ்மான் உள்பட. லைகாவும், ஐங்கரனும் இணைந்து படத்தை தயாரிக்கின்றன.
 
பாகுபலியின் பிரமாண்டத்தை திரையிலும், வசூலை டிக்கெட் கவுண்டரிலும் முறியடிக்க வேண்டும் என்பதே ஷங்கரின் ஒரே லட்சியம்.

Share this Story:

Follow Webdunia tamil