Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யா, கார்த்தியால் பலகோடி நஷ்டம். புலம்பிய ஞானவேல்ராஜா

சூர்யா, கார்த்தியால் பலகோடி நஷ்டம். புலம்பிய ஞானவேல்ராஜா
, ஞாயிறு, 12 மார்ச் 2017 (20:05 IST)
அண்ணன், தம்பி நடிகர்களான சூர்யா, கார்த்தி நடித்த பெரும்பாலான படங்களை தயாரித்தவர் ஞானவேல்ராஜா. ஆனால் சமீபகாலமாக இருவருடைய படங்களும் பெரிய லாபத்தை கொடுக்கவில்லை. தொடர்ந்து சுமாராக ஓடியதால் தனக்கு பலகோடி நஷ்டம் என்று ஞானவேல்ராஜா தன்னிடம் புலம்பியதாக தயாரிப்பாளர் டி.சிவா கூறியுள்ளார்.



 


ஒருகாலத்தில் ஒன்றாக தயாரிப்பாளர் சங்க பதவியில் இருந்த சிவா, ஞானவேல்ராஜா தற்போது எதிரெதிர் அணியில் போட்டியிடுகின்றனர். சமீபத்தில் சிவா குறித்து ஞானவேல்ராஜா சர்ச்சைக்குரிய விமர்சனம் செய்த நிலையில் தற்போது சிவா பதிலடி கொடுத்துள்ளார்

இதுகுறித்து இன்று சிவா பேசியபோது, 'ஒரு சில வருடங்களுக்கு முன்பு கார்த்தி மற்றும் சூர்யாவால் தனக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று ஞானவேல் ராஜா என்னிடம் கூறியிருந்தார். மேலும், நீங்கள் தான் கால்ஷீட் வாங்கி தரவேண்டும் என்று கூறியுள்ளதாக சிவா தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல், சிவகார்த்திகேயனிடமும் கால்ஷீட் வாங்கி தாருங்கள் என்று புலம்பியவர் தற்போது எங்களைப் பற்றி பேசுவது எந்த விதத்தில் நியாயம். எங்களை பற்றி பேசுவதோடு சூர்யா குடும்பத்தின் பெயரையே கெடுத்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரமுக்கு அம்மாவா.. நானா.. நடிகை அம்பிகா!