Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகேஷ் நாராயணன் படத்தில் நானே நினைத்தாலும் நடிக்க முடியாது… கமல் சொன்ன தகவல்!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (09:44 IST)
விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து கமல் நடிக்கும் அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதையடுத்து அந்த படத்தை விஸ்வரூபம் படத்தின் படத்தொகுப்பாளர் மகேஷ் நாராயணன் இயக்க உள்ளார். இதை கமல்ஹாசனே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மகேஷ் நாராயணன் c u soon மற்றும் மாலிக் ஆகிய படங்களின் மூலமாக வெற்றிகரமான இயக்குனராக அறியப்படுபவர். ஆனால் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த படம் பற்றிய வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது இந்த படம் நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி பத்திரிக்கையாளர் சித்ரா லட்சுமணன் தன்னுடைய யுடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். அதில் சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்த போது இந்த படம் பற்றி கேட்டதாகவும், அதற்கு கமல்ஹாசன் அளித்த பதிலையும் தெரிவித்துள்ளார். அதில் “இப்போது நானே நினைத்தாலும், அந்த மாதிரி படங்களில் நடிக்க முடியாது. ஆனால் அந்த படத்தை எங்கள் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கலாம்.” எனக் கூறியுள்ளார். அதனால் மகேஷ் நாராயணன் படம் இப்போதைக்கு கமல் நடிக்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அரை பாட்டில் பீரை போட்டுட்டு ராஜா பண்ணுன அலப்பறை! - மேடையில் போட்டுடைத்த ரஜினி!

வெற்றி தொடர்ந்து கொண்டிருந்தால் அதன் அருமை தெரியாது.. தோல்வியும் வேண்டும்: ரஜினிகாந்த்

7 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்குப் பிடித்த சினிமா உலகிற்குள் மீண்டும் வருகிறேன் - நடிகர் ரமீஸ் ராஜா

'நான் தான் சி.எம் .. நடிகர், இயக்குனர் பார்த்திபன் வெளியிட்ட போஸ்டரால் பரபரப்பு..!

அனுஷ்கா ஷெட்டி எடுத்த அதே முடிவை எடுத்த ஐஸ்வர்யா லட்சுமி.. ரசிகர்கள் சோகம்..

அடுத்த கட்டுரையில்
Show comments