Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு: 'சர்கார்' பிரச்சனை குறித்து கமல்

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (19:02 IST)
விஜய் நடித்த 'சர்கார்' பிரச்சனை குறித்து பேசாத அரசியல்வாதிகளே குறைவு என்று சொல்லலாம். இந்த களேபேரத்திலும் திமுக தரப்பிடம் இருந்து இந்த படம் குறித்து எந்தவித ஆதரவோ எதிர்ப்போ வராமல் இருப்பது ஆச்சரியம் இல்லை. ஏன் என்பதும் அனைவரும் அறிந்த்தே.

இந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் இருந்து முதல் நபராக கமல்ஹாசன், சர்கார் படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். சற்றுமுன்  கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ''முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும். என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே 'மெர்சல்' படத்தின் ரிலீசின்போது தமிழக பாஜகவினர் பிரச்சனை செய்தபோதும் கமல்ஹாசன் தனது ஆதரவை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை ரம்யா குறித்து இன்ஸ்டாவில் ஆபாச கருத்து: 48 பேர் மீது வழக்கு.. 3 பேர் கைது..!

தெலுங்குக்கு ராஜமௌலி… தமிழுக்கு லோகேஷ்…. ரஜினிகாந்த் பாராட்டு!

பார்ட் 2 படங்கள் நடிப்பதில் பயம்… ஆனா அந்த படம் மட்டும் நடிக்க ஆசை- சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

பிராம்குமார் & விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தில் கதாநாயகி ஆகும் ருக்மிணி வசந்த்!

இனி சனிக்கிழமை எதிர்நீச்சல் 2 ஒளிபரப்பாகாது.. சன் டிவி அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments