அனைவருக்கும் புரியும் வகையில் கமல் போட்ட டுவீட்: ஆச்சரிய தகவல்

Webdunia
ஞாயிறு, 3 மே 2020 (17:19 IST)
கமல்ஹாசன் டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்தாலே அதற்கு அர்த்தம் தேடி பலர் நாட்கணக்கில் அலைவதுண்டு. தூய தமிழில் அவர் பதிவு செய்யும் டுவிட்டுக்களை மிகுந்த சிரமத்திற்கு பின்னரே யாராவது தூய தமிழில் பதிவு செய்வார்கள். அதன்பின்னரே அவர் என்ன சொல்லியிருக்கின்றார் என்பது தெரிய வரும்
 
இந்த நிலையில் சற்றுமுன் மே தினத்தில் தனது கட்சியின் தொண்டர்கள் உழைப்பாளர்களுக்கு செய்த உதவி குறித்து ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். நல்லவேளையாக இந்த டுவீட் தூய தமிழில் இல்லாமல் அனைவருக்கும் புரியும் வகையில் இருப்பது ஆறுதலான ஒன்றாக கருதப்படுகிறது. அவர் சற்றுமுன் பதிவு செய்த டுவீட் இதுதான்:
 
உழைப்பவர்கள் பசித்திருக்கக் கூடாது என்கின்ற “எம் எண்ணத்தை” செயலாக்கி தொழிலாளர் தினமான மே 1ம் தேதி அன்று தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் எளியோர்க்கு உதவி பொருட்கள் வழங்கிய மக்கள் நீதி மய்யத்தின் கள வீரர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அலாதி அன்பிருந்தால், அனாதை யாருமில்லை’ என்று பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டுக்கு கமல் ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மங்களகரமான மஞ்சள் உடையில் அசத்தும் கீர்த்தி சுரேஷ்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன் போட்டோஸ்!

ரஜினிக்குக் கதை சொல்ல தொடர்ந்து முயற்சி செய்யும் கார்த்திக் சுப்பராஜ்…!

டாக்டர் சிவராஜ்குமார் நடிக்கும்,"கும்மடி நரசைய்யா" வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

பயந்துகொண்டேதான் சென்சாருக்குப் போனேன்… பைசன் படம் குறித்து மாரி செல்வராஜ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments