Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் கமல்ஹாசன் பணம் வழங்வில்லை: அறக்கட்டளை விளக்கம்

Webdunia
சனி, 3 அக்டோபர் 2015 (13:07 IST)
பெற்றால் தான் பிள்ளையா தொண்டு நிறுவனத்துக்கு நடிகர் கமல்ஹாசன் 16 கோடி ரூபாயை வழங்கவில்லை என்று அந்த நிறுவனத்தின் மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.



நடிகர் கமல்ஹாசன் தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடித்துள்ளார்.அதற்காக அவருக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
சம்பளமாக பெற்ற 10 கோடி ரூபாய் மற்றும்  தன் சொந்த பணம் 6 கோடி ரூபாயையும் சேர்த்து மொத்தம் 16 கோடி ரூபாயை "பெற்றால் தான் பிள்ளையா" என்ற தனியார் தொண்டு நிறுவனத்துக்கு கமல்ஹாசன் அளித்தாக தகவல் வெளியானது. இந்தத் தகவல் சில ஊடகங்களிலும் இணையதளங்களிலும் செய்தியாக வெளியாகின. 
 
ஆனால் தங்களின் தொண்டு நிறுவனத்துக்கு கமல்ஹாசன் 16 கோடி ரூபாயை அளிக்கவில்லை என்று அந்த நிறுவனத்தின் மேலாளர் வினிதா சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார். 
 
இது குறித்து அவர் கூறுகையில், " ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியான இந்தத் தகவல் உண்மைக்கு புறம்பானது.  இந்த தவறான செய்தி எங்களின் தொண்டு நிறுவனத்துக்கு பல சிக்கல்களை உருவாக்கி விடும்.  கமல்ஹாசன் ஏற்கனவே 16 கோடி ரூபாயை அளித்துள்ளதால் ஏன்? இந்த தொண்டு நிறுவனத்துக்கு பண உதவி அளிக்க வேண்டும் என்ற எண்ணம் மற்றவர்களுக்கு ஏற்படக் கூடும். எனவே தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். எங்களது குழந்தைகளுக்கு உதவிகள் செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருந்தால் போதும்" இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 
 
 

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments