Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எண்பதுகளின் நடிகர் நடிகைகள் சந்திப்பு - இந்த முறையும் கல்தா தந்த கமல்

எண்பதுகளின் நடிகர் நடிகைகள் சந்திப்பு - இந்த முறையும் கல்தா தந்த கமல்
, திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (19:02 IST)
எண்பதுகளில் இந்திய சினிமாவில் - பெரும்பாலும் தென்னிந்திய மொழிகளில் - கோலோச்சிய நடிகர் நடிகைகள் ஆண்டுதோறும் ஒன்றுகூடி, பேசி பழகி அரட்டையடிப்பது வழக்கம். இதுவரை ஐந்துமுறை இந்த சந்திப்பு நடந்துள்ளது.


 

ரஜினியும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அடுத்தமுறை எப்படியாவது கமலை அழைத்துவர வேண்டும் என்று முடிவு செய்தனர். ஆனால், ஆறாவது வருடமான இந்தமுறையும் கல்தா கொடுத்தார் கமல்.
 
இந்த வருட சந்திப்பு சென்னை ஓலிவ் கடற்கரையில் உள்ள நீனா ரெட்டி கெஸ்ட் ஹவுஸில் நடைபெற்றது. 
 
webdunia

 
இதில், 80-களில் முன்னணி நடிகர்கள் சிரஞ்சீவி, மோகன்லால், வெங்கடேஷ், பாக்யராஜ், சத்யராஜ், பிரபு, மோகன், சரத்குமார், நரேஷ், பிரதாப் போத்தன், ஜெயராம், ரகுமான், சுமன், ராஜ்குமார், ஜாக்கி ஷெராப், பானுசந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். ரஜினி தற்போது நடந்த இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.
 
மேலும், நடிகைகளில் லிசி, குஷ்பு, சுஹாசினி, சுமலதா, சரிதா, ராதா, ராதிகா, ரம்யா கிருஷ்ணன், பூர்ணிமா, மேனகா, பார்வதி, ஜெய்ஸ்ரீ, ரேவதி, ஜெயசுதா, பூனம், ஷோபனா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை சுஹாசினி, லிசி, குஷ்பு மூவரும் இணைந்து செய்திருந்தார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil