Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது இந்தியாவை உருவாக்கும் தருணம்; கமல் கருத்து!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (14:57 IST)
ஆதார் தொடர்பான வழக்கில் தனி மனித ரகசிய காப்புரிமை, அடிப்படை உரிமையே என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு வருவதை எதிர்த்து தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தால் ஒவ்வொரு முறையும் ஆதார் எண் கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் சாசனத்தின்படி ஒருவரின் அந்தரங்கம் அடிப்படை உரிமையா? என்ற கேள்வி எழுந்தது.
 
இதையடுத்து நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. அதாவது, தனி மனித ரகசிய காப்புரிமை அடிப்படை உரிமையே என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு ஆதார் வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், உச்ச நீதிமன்றம் தனி மனித உரிமையை நிலை நிறுத்தியுள்ளது. மதிப்பிற்குரிய நீதிபதிகளுக்கு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். இது இந்தியாவை உருவாக்கும் தருணங்களுள் ஒன்றாகும் என தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments