Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யாவுக்கு குடை பிடிக்க சொன்ன கமல்: நொந்து நூலான நெட்டிசன்கள்

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (22:45 IST)
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னர் ஐஸ்வர்யாதான் என்பது இப்போதே தெரிந்துவிட்டது. ஐஸ்வர்யாவுக்கு பிக்பாஸ் மற்றும் கமல் கொடுக்கும் தொடர்ச்சியான சலுகையின் தைரியம் தான் ஐஸ்வர்யாவை இந்த நிலைக்கு தள்ளியுள்ளது. 
 
கடந்த நான்கு வாரங்களுக்கு முன்பே வெளியே சென்றிருக்க வேண்டிய ஐஸ்வர்யாவை வேண்டுமென்ற உள்ளே வைத்து கொண்டிருக்கும் பிக்பாஸை பார்வையாளர்கள் யாரும் மன்னிக்க தயாராக இல்லை. கடந்த சீசனில் உள்ள ஜூலியை விட பலமடங்கு பார்வையாளர்களுக்கு வில்லியாக தெரியும் ஐஸ்வர்யாவுக்கு இன்னும் பிக்பாஸ் மற்றும் கமல் ஆதரவு கொடுத்து கொண்டிருந்தால் அவர்கள் இருவர் மேல் மரியாதைக்குத்தான் ஆபத்து
 
இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா செய்த பல தவறுகளுக்கு தண்டனையே கொடுக்காத, குறைந்த பட்சம் கடுமையாக கண்டிக்க கூட இல்லாத கமல், ஐஸ்வர்யாவின் முடியை பிடித்தது பெரிய தவறு என்பது போல் செண்ட்ராயனை ஐஸ்வர்யாவுக்கு குடைபிடிக்க வேண்டும் என்ற தண்டனையை கொடுத்துள்ளார். காசு வாங்கி கொண்டு கடமைக்காக ஷோ நடத்தும் கமலிடம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும் என்பதே பல நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது. இனிமேல் 'உங்களில் நான்' என்று சொல்வதற்கு பதிலாக 'ஐஸ்வர்யாவுக்குள் நான்' என்று கமல் சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று பலர் கமெண்ட்டுக்கள் பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா மகளின் பட்டமளிப்பு விழா புகைப்படங்கள்.. பெருமையுடன் பகிர்ந்த ஜோதிகா..!

பிரபல நடிகை குளித்த தண்ணீரில் தயாரித்த குளியல் சோப்.. விலை ரூ.700..!

சம்பளத்தில் சந்தானத்தை மிஞ்சிய சூரி.. ஆனால் காமெடியனாக இன்னும் சந்தானம் தான் கெத்து..!

துபாயில் நடைபெற இருக்கும் அஜித் - தனுஷ் சந்திப்பு.. அடுத்த படம் கிளிக் ஆகுமா?

ஆர்த்தி மட்டுமல்ல, கராத்தே பாபு படத்தாலும் சிக்கல்.. ஜெயம் ரவி படு அப்செட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments