Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் விரும்பி பார்த்த படம்????

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (16:31 IST)
சிறந்த படங்களைப் பார்த்து, அப்படங்களை எடுத்த கலைஞர்களைப் பாராட்டும் பழக்கமுள்ள கமல்ஹாசன் தற்போது ஒரு படத்தை தானாக விரும்பிக் கேட்டுப் பார்த்து பாராட்டியுள்ளார்.

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு தயாரிப்பில் கடந்த வாரம் வெளியான பரியேறும் பெருமாள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேறபைப் பெற்றது.

நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் போதுமான அளவுக்கு தியேட்டர்கள் ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மக்களின் ஆதரவு அதிகமாக இருப்பதால் திங்கள் கிழமை  முதல் திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டன.

இதையடுத்து திரைக் கலைஞர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் எனப் படத்தை அனைவரும் இதனைப் பாராட்டி வருகின்றனர். படம் பற்றிய விமர்சனங்களைக் கேள்விபட்ட கமல் படக்குழுவினரை அழைத்து தான் படம் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து படக்குழுவினர் கமலுக்கு படத்தைக் காண்பித்துள்ளனர். படத்தைப் பார்த்து முடித்தவுடன் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் பா ரஞ்சித் இருவரையும் பாராட்டியுள்ளார்.

மேலும் தனது டிவிட்டரில் ‘மக்கள் மனமேறி அமர்ந்துவிட்ட பரியேறும் பெருமாளுக்கு என் வாழ்த்துக்கள். நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் பாராட்டுக்கள்’ என்றும் பதிவு செய்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குட் பேட் அக்லி… தமிழ்நாட்டில் வசூல் வேட்டை… மூன்று நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

பிரபல இயக்குனரின் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார்!

விஜய்யை நடிக்க வைக்க எந்த இயக்குனரும் முன்வரவில்லை… SAC பகிர்ந்த பிளாஷ்பேக்!

என் முதல்படம் வந்தபோது நிறைய பெண் ரசிகைகள் இருந்தார்கள்… நடிகர் ஷாம் பகிர்வு!

மங்காத்தா படத்தோட கதை என்னுடையது… இயக்குனர் கங்கை அமரன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments