Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காயத்ரி ரகுராமுக்கு நானா திரைக்கதை எழுதி கொடுத்தேன்? கமல் கேள்வி?

Webdunia
வியாழன், 13 ஜூலை 2017 (05:50 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியால் சமீபத்தில் ஏற்பட்ட சர்ச்சை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான 'காயத்ரி ரகுராம்' கூறிய ஒரு வார்த்தை. 'சேரி பிஹேவியர்' என்று அவர் கூறிய வார்த்தை ஜாதி துவேஷத்தை ஏற்படுத்தியதாக பலர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இன்று ஒருவர் இதுகுறித்து போலீஸ் புகாரும் அளிக்க உள்ளார்.



 
 
இந்த நிலையில் நேற்று அளித்த பேட்டியில் கமல் கூறியபோது, 'காயத்ரிக்கு நான் திரைக்கதை எழுதிக்கொடுத்திருந்தால், அது என் பொறுப்பு. அதற்கு மன்னிப்பு கேட்கலாம். தவிர, அங்க எப்படி சென்சார் பண்ண முடியும்? நான் வாழும் சொசைட்டில அதவிட மோசமான வார்த்தைகள் பேசிட்டுதான் இருக்காங்க. சாதினு பேசறாங்க. அதையே நீக்க முடியல.’’ என்று கூறினார்.
 
இதே கருத்துக்கு நடிகை கஸ்தூரி பேட்டியளித்தபோது, 'காயத்ரி அவ்வாறு கூறியிருந்தால் கண்டிப்பாக அது தவறுதான். ஜாதி என்று கூறுவது சட்டப்படி தவறு அல்ல. ஆனால் ஒரு குறிப்பிட்ட ஜாதியை தவறாக விமர்சிப்பது சட்டப்படி தவறு' என்று கூறினார்.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்… இன்று முதல் மீண்டெழுமா?

பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் எங்க கம்பெனிக்குதான் சொன்னார்- கமல் பகிர்ந்த சீக்ரெட்!

மோடி சாதிகளை ஒழிச்சிட்டாரே? ஏன் பிராமணர்களாய் இருக்கீங்க? - ’புலே’ திரைப்பட பிரச்சினையில் இயக்குனர் ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments