Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலாபவன் மணி தற்கொலை செய்து கொண்டாரா? - சகோதரர் புகாரால் பரபரப்பு

கலாபவன் மணி தற்கொலை செய்து கொண்டாரா? - சகோதரர் புகாரால் பரபரப்பு

கலாபவன் மணி தற்கொலை செய்து கொண்டாரா? - சகோதரர் புகாரால் பரபரப்பு
, திங்கள், 7 மார்ச் 2016 (11:11 IST)
கலாபவன் மணியின் திடீர் மரணம் கேரளா திரைக்கலைஞர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இந்நிலையில், கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 
 
கலாபவன் மணியின் அண்ணன் வேலாயுதன் கடந்த 2009 -இல் சாலக்குடியில் உள்ள தனது வீட்டில் யாருமில்லாத போது தீ வைத்து தன்னை எரித்துக் கொண்டார். அவரது தற்கொலை கலாபவன் மணியை மனதளவில் கடுமையாக பாதித்தது. அண்ணனைப் போல மணியும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 
 
கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் மரணம் சம்பவித்ததாக அம்ரிதா மருத்துவமனை கூறியுள்ளது. அதேநேரம், ரத்தம் வாந்தியெடுத்த நிலையில் மணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அவரது உடலில் மெத்தில் ஆல்கஹால் படிந்திருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. 
 
மணியின் சகோதரரின் புகாரைத் தொடர்ந்து சாலக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil