Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடி ரிலீஸீல் இருந்து பின் வாங்கிய விஜய் சேதுபதி படம்!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (17:00 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாவதாக அறிவிக்கபப்ட்டு இருந்தது.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகியப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மணிகண்டன் தனது நான்காவதாகப் படமாகக் கடைசி விவசாயி எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்தப்படத்தில் 70 வயது விவசாயி ஒருவர் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் முழுவதுமாக தயாராகி விட்டாலும் சில ஆண்டுகளாக ரிலீஸாகாமல் கிடப்பில் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா லாக்டவுனும் சேர்ந்துகொண்டதால் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய இயக்குனரும் தயாரிப்பாளருமான மணிகண்டன் முடிவு செய்துள்ளாராம். சோனி லிவ் தளத்தில் ரிலீஸாவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.

எல்லாம் முடிந்து அடுத்த மாதம் ரிலீஸாகும் என நினைத்த நிலையில் இப்போது ஓடிடியில் இருந்து விலகி திரையரங்கில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துவிட்டாராம் மணிகண்டன். இது சம்மந்தமாக விஜய் சேதுபதி மிகப்பெரிய அளவில் பொருளாதார உதவி செய்துள்ளாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரன்பீர் கபூருடன் இணைந்து இந்தி படத்தில் நடிக்கும் ஃபஹத் பாசில்!

இன்னும் விற்பனை ஆகாத ‘மதராஸி’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமை… காரணம் என்ன?

கொட்டுக்காளி வினோத்ராஜ் இயக்கத்தில் நடிக்கும் மணிகண்டன்?

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படமும் தீபாவளிக்கு வருகிறதா?

வாடிவாசல் படத்தைக் கைவிட விரும்பாத தாணு… சூர்யாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments