Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னத்தின் விமர்சனத்தால் கடுப்பான கே வி ஆனந்த்!

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (08:00 IST)
நவரசாவில் ஒரு குறும்படத்தை இயக்கியுள்ள கே வி ஆனந்த் தயாரிப்பாளர் மணிரத்னத்தோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா ஆகியோர் இணைந்து நெட்பிளிக்ஸுக்காக ஆந்தாலஜி திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர். நவரசா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் 9 கதைகள் காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். இந்த தொடருக்கு கிரியேட்டிவ் ஹெட்டாக மணிரத்னம் உள்ளார். இந்த 9 படங்களையும் கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், அரவிந்த் சாமி, கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்பராஜ், கே வி ஆனந்த், சர்ஜுன், பொன்ராம் ஆகியோர் ஒப்பந்தமானார்கள்.

இந்நிலையில் அந்த படத்தில் இருந்து ஏற்கனவே இயக்குனர் ஹலிதா ஷமீம் மற்றும் பொன்ராம் ஆகியவர்கள் விலகினர். இந்நிலையில் இப்போது இயக்குனர் கே வி ஆனந்தும் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. கேவி ஆனந்த் விலகலுக்கும் அவருக்கும் தயாரிப்பாளர் மணிரத்னத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே காரணம் என சொல்லப்படுகிறது.

கே வி ஆனந்த் எடுத்த காட்சிகளை பார்த்த மணிரத்னம் மிகவும் மோசமாகப் படமாக்கப்பட்டுள்ளதாகக் கோபமாக கூறவே போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளைக் கூட கவனிக்காமல் கே வி ஆனந்த் விலகிவிட்டாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments