Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜுலையில் வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார்

ஜுலையில் வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார்

ஜுலையில் வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார்
, புதன், 15 ஜூன் 2016 (11:34 IST)
ரஜினியையும், கமலையும் தொடர்ந்து இயக்கி வந்த கே.எஸ்.ரவிக்குமார் லிங்காவுக்குப் பிறகு ஆளையே காணவில்லை.


 


நாலு மாசத்துக்கு ஒரு படம் என்று ஓடிக்கொண்டிருந்தவரின் இந்த நிதானம் ஆச்சரியமானது.
 
லிங்காவுக்கு முன்பே கன்னட நடிகர் சுதீப்பை வைத்து, தமிழ், கன்னடத்தில் ஒரு படத்தை இயக்க கே.எஸ்.ரவிக்குமார் திட்டமிட்டிருந்தார். அதன் வேலைகள் தொடங்கயிருந்த நேரத்தில்தான் ரஜினியிடமிருந்து லிங்கா வாய்ப்பு வந்தது. சுதீப்பிடம், ரஜினியே பேசி ரவிக்குமாரை முதலில் லிங்காவை இயக்க வைத்தார்.
 
சுதீப்பை வைத்து ரவிக்குமார் இயக்குவதாக இருந்த இருமொழிப்படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முடிஞ்சா இவன புடி என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் சுதீப்புடன் நித்யா மேனன் நடித்துள்ளார். 
 
ஜுலையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிங்கப்பூர் வேண்டாம் சிறுமலைகாடு போதும்