ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளைத் தவறவிடும் கே எல் ராகுல்… காரணம் என்ன?

vinoth
செவ்வாய், 11 மார்ச் 2025 (11:58 IST)
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டு இறுடியில் நடைபெற்றது. அதற்கு சில நாட்களுக்கு முன்னர்  லக்னோ அணியிலிருந்து அந்த அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் விடுவிக்கப்பட்டார். இது அதிர்ச்சியான ஒன்றாக பார்க்கப்பட்டது. கடந்த 3 சீசன்களாக லக்னோ அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட்டு வந்தார்.

அதன் பின்னர் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. அதனால் அவரை அந்த அணியின் கேப்டனாக நியமிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்ஸர் படேல் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இம்மாத இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில் கே எல் ராகுல் ஆரம்ப போட்டிகள் சிலவற்றை இழக்க நேரிடலாம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவரது மனைவி அதியா ஷெட்டிக்கு இம்மாத இறுதியில் மகப்பேறு நடக்கவுள்ளதாகவும், அதற்காக அவர் அவரோடு நேரம் செலவிட முடிவு செய்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாருவின் காலில் விழுந்து கதறிய ரம்யா.. அப்படி என்ன தான் நடந்தது?

எனக்கும் நாகேஷுக்கும் மட்டும்தான் அது தெரியும்.. இப்படிலாம் நடந்திருக்கா?

மகேந்திரன் பற்றி சொன்னதுல என்ன தப்பு? ராஜகுமாரனுக்காக வக்காளத்து வாங்கும் பயில்வான் ரங்கநாதன்

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments