Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் மட்டும் படப்பிடிப்பை முடித்த ஜோதிகா!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2017 (18:36 IST)
ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘மகளிர் மட்டும்’. இப்படத்தை ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா இயக்கி வருகிறார். ஜோதிகாவுடன் ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

 
இப்படத்தில் ஜோதிகா, பிரபா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், ஆவணப்படம் எடுக்கும் பெண்ணாக ஜோதிகா  நடித்துள்ளார். ஆவணப்படும் எடுக்கும்  போது அவர் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இப்படம் என்று அவர் கூறியுள்ளார். முழுக்க முழுக்க பெண்களின் பிரச்சினைகளை அலசும் படமாக திரைக்கதை அமைத்திருக்கிறாராம்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து படத்தின் இறுதிக்கட்ட பணிகளை படக்குழுவினர்  தொடங்கவுள்ளனர். ஜிப்ரான் இசை, மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கெனவே ‘மகளிர் மட்டும்’ படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'கங்குவா’ தோல்வியில் இருந்து மீண்டாரா சூர்யா? ரெட்ரோ - திரை விமர்சனம்!

வித்தியாசமான உடையில் ஸ்டைலான போஸ் கொடுத்த ரெஜினா!

ஹோம்லி உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ராஷி கண்ணா!

இந்த தமிழ்ப் பாடலைதான் நான் அதிகமாகக் கேட்கிறேன்… கோலி பகிர்ந்த தகவல்!

ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி அமைதியை கொண்டு வருவார்: ரஜினிகாந்த் நம்பிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments