Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காந்தாரா மூன்றாம் பாகத்தில் இணைகிறார் ஜூனியர் NTR!

vinoth
புதன், 6 ஆகஸ்ட் 2025 (09:59 IST)
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகம் என சொன்னாலும் காந்தாரா கதையின் முன்கதைதான் படமாக்குகிறார்கள்.

படத்துக்கு காந்தாரா –சேப்டர் 1 எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி பேசிய இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம். இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது. இந்த படத்தில் தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும்.” எனக் கூறியிருந்தார். இதன் ஷூட்டிங் ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்த நிலையில் சமீபத்தில் நிறைவுற்றது. படம் அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதற்கிடையில் காந்தாரா படத்தின் மூன்றாம் பாகத்தையும் உருவாக்கும் திட்டத்தில் உள்ளதாம் படக்குழு. காந்தாரா படத்துக்குப் பிறகான கதையை மூன்றாம் பாகத்தில் சொல்லவுள்ளதாக தெரிகிறது. இதில் கதாநாயகனாக நடிக்க ஜூனியர் என் டி ஆரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் கோலியைக் காதலித்தேனா?... தமன்னா கொடுத்த பதில்!

என்னது கார்த்தி சின்ன ஹீரோவா?... நெறியாளரின் கேள்விக்கு நச்சென்ற பதில் கொடுத்த லோகேஷ்!

பிரபல நடிகையை Date செய்கிறாரா தனுஷ்?.. இந்தி ஊடகங்கள் பற்றவைத்த தீ!

மணிரத்னத்தின் அடுத்த படத்தில் த்ருவ் விக்ரம் &ருக்மிணி வசந்த்!

சீரியலில் அம்மா - மகன்.. நிஜத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments