Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிகிர்தண்டா இந்தி ரீமேக் - தயாரிப்பாளர் மீது கார்த்திக் சுப்பாராஜ் புகார்

Webdunia
புதன், 20 மே 2015 (10:03 IST)
ஜிகிர்தண்டா படம் தயாரிப்பில் இருந்தபோதே அதன் தயாரிப்பாளர் கதிரேசனுக்கும், இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜுக்கும் முட்டிக் கொண்டது. படத்தின் வெளியீட்டை வேண்டுமென்றே தாமதப்படுத்தி, படத்தை சரியாக விளம்பரப்படுத்தாமல் கார்த்திக் சுப்பாராஜ் மற்றும் படத்தில் பங்காற்றிய அனைவரின் உழைப்பையும் அவமதித்தார் கதிரேசன்.
 
ஜிகிர்தண்டாவின் இந்தி ரீமேக் உரிமை சஜித் நடியட்வாலாவுக்கு பெரும் தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. ஒரு படத்தின் ரீமேக் உரிமை விற்கப்படும்போது கதை எழுதிய இயக்குனருக்கு 40 சதவீத பணம் தரப்பட வேண்டும். கதிரேசன் ரீமேக் உரிமையை சஜித் நடியட்வாலாவுக்கு விற்றதை கார்த்திக் சுப்பாராஜிடம் தெரிவிக்கவில்லை. முறைப்படி அவரது பங்கும் வந்து சேரவில்லை.
 
கதிரேசன் மீது இயக்குனர்கள் சங்கத்தில் கார்த்திக் சுப்பாராஜ் புகார் தெரிவித்துள்ளார். விரைவில் பஞ்சாயத்து நடக்க உள்ளது.

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

விஜய்யின் கோட் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன்!

அஜித் படத்தைக் கண்டுகொள்ளாமல் பாலிவுட் செல்கிறாரா சிறுத்தை சிவா!

Show comments