Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நகைச்சுவை கலந்த சீரியஸான தமிழ் படம் ஜெமினி கணேசன்: இயக்குனர்

நகைச்சுவை கலந்த சீரியஸான தமிழ் படம் ஜெமினி கணேசன்: இயக்குனர்
, புதன், 4 நவம்பர் 2015 (18:28 IST)
தற்போது ஜீவாவின் 25 வது படமான போக்கிரி ராஜாவில் நடித்து வரும் அவர், அடுத்து நடிக்க உள்ள ஜெமினி கணேசன் என்ற படம் நகைச்சுவை கலந்த சீரியஸான தமிழ்படம் என்று இயக்குனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.


 
 
பல வெற்றிப்படங்களை நடித்த ஜீவா , சமீபத்தி்ல் வெளியான யான் என்று படம் படுதோல்வி அடைந்தது. இந்த படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளியை எடுத்து கொண்டார். தனது 25 படம் வெற்றி படமாக அமைய வேண்டும் என்பதற்காக மிகவும் கவனமாக கதையை தேர்வு செய்து தற்போது நடித்து வருகிறார். இவரது 25 ஆவது படமான போக்கிரி ராஜாவை தொடர்ந்து அடுத்து அவர் நடிக்க உள்ள  புதிய படத்திற்கு “ஜெமினி கணேசன்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இயக்குனர் முத்துக்குமார் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் தலைப்பிற்காக மறைந்த நடிகர் திரு.ஜெமினி கணேசன் அவர்களின் குடும்பத்தினரிடம் முறையாக அனுமதி பெற்றுள்ள படக்குழுவினர் விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமையும் என்று இயக்குனர் நம்பிகையுடன் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் கதையை பலமுறை கேட்டறிந்தார் என்றும், எனக்கு ரொம்பவும் பிடித்துள்ளதாக ஜீவா கூறியதாகவும். இந்த படம் அவருக்கு பொறுத்தமான நகைச்சுவை கலந்த கதையாக இருக்கும் என்றும் இயக்குனர் கூறினார்

Share this Story:

Follow Webdunia tamil