Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயராம் இப்போது யானை எழுத்தாளர்

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2015 (13:20 IST)
ஜெயமோகனின் யானை டாக்டர் என்ற கதையை வாசித்திருக்கிறீர்களா? இல்லை என்றால் உடனே வாங்கிப் படித்துவிடுங்கள். அற்புதமான கதை.
 
நடிகர் ஜெயராம் ஒரு யானைப் ப்ரியர். தனது வீட்டில் ஒரு யானையை வளர்த்து வருகிறார். தனி பாகன், டாக்டர் என்று யானைக்கு எல்லா சௌகரியங்களும் உண்டு. ஜெயராமின் யானைப் பாசத்தைப் பார்த்து யானை மையக்கதைகளில் அவரை பலமுறை நடிக்க வைத்திருக்கிறார்கள். அப்படி யானை ப்ரியத்தை மையப்படுத்தி ஜெயராம் நடித்த படங்களில், திருவம்பாடி தம்பான் முக்கியமானது.
 
யானைகள் அவ்வப்போது மதம்கொண்டு பாகனையும், வீதியில் போகிறவர்களையும் புரட்டியெடுத்து கொல்வதால், யானைகள் மீது பொதுமக்களிடையே சின்ன அதிருப்தி தோன்றியுள்ளது. அது ஜெயராமை வருத்தப்பட வைக்க, யானைகளின் அருமை பெருமைகளை வைத்து, ஆட்கூட்டத்தில் ஆனப்பொக்கம் என்ற புத்தகத்தை எழுதினார். அதனை சமீபத்தில் மம்முட்டியை வைத்து வெளியிட்டார். புத்தகத்தை பெற்றுக் கொண்டது, ஜெயராம் தனது வீட்டில் வளர்க்கும் யானையின் பாகன், குட்டன்.
 
அடுத்தமுறை ஜெயராமை பார்க்கையில், யானை சௌக்கியமா என்று கேளுங்கள். மகிழ்ந்து போவார்.

'சௌகிதார்' எனும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'ரோரிங் ஸ்டார்' ஸ்ரீ முரளி வெளியிட்டார்!

அல்லு அர்ஜூன் படம் டிராப்.. அட்லி அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்..!

எனக்கும் பொண்ணு கொடுக்க ஆள் இருக்குது: நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரதீப்..!

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை .. பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்..!

கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!

Show comments