Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் திரைப்படம் சென்னையில் திரையிடல்

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (09:51 IST)
மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் நினைவை போற்றும் வகையில், அவரது இயக்கத்தில் வெளியான, யாருக்காக அழுதான் திரைப்படத்தை சென்னையில் தமிழ்ஸ்டுடியோ திரையிடுகிறது.
 
ஜெயகாந்தன் இயக்கிய படங்களில் முக்கியமானது, யாருக்காக அழுதான். நாகேஷ் நடித்த இந்தத் திரைப்படத்தை சென்னை கன்னிமரா நூலகத்துக்கு எதிரேயுள்ள ஜீவனஜோதி அரங்கின் இக்சா மையத்தில் தமிழ்ஸ்டுடியோ திரையிடுகிறது. அனுமதி அனைவருக்கும் இலவசம். நாள் நாளை சனிக்கிழமை (18-04-15) மாலை ஆறு மணி.
 
கேரளாவைச் சேர்ந்த ஹரி என்பவர் டீக்கடை நடத்தும் விஜயன் என்பவரைப் பற்றி எடுத்த ஆவணப்படம் முதலில் திரையிடப்படும். அதையடுத்து யாருக்காக அழுதான் திரைப்படம். ஜெயகாந்தனின் இயக்க ஆளுமையை தெரிந்துகொள்ள இது நல்ல சந்தர்ப்பம். சினிமா ஆர்வலர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments