Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் திரைப்படம் சென்னையில் திரையிடல்

ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் திரைப்படம் சென்னையில் திரையிடல்
, வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (09:51 IST)
மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் நினைவை போற்றும் வகையில், அவரது இயக்கத்தில் வெளியான, யாருக்காக அழுதான் திரைப்படத்தை சென்னையில் தமிழ்ஸ்டுடியோ திரையிடுகிறது.
 
ஜெயகாந்தன் இயக்கிய படங்களில் முக்கியமானது, யாருக்காக அழுதான். நாகேஷ் நடித்த இந்தத் திரைப்படத்தை சென்னை கன்னிமரா நூலகத்துக்கு எதிரேயுள்ள ஜீவனஜோதி அரங்கின் இக்சா மையத்தில் தமிழ்ஸ்டுடியோ திரையிடுகிறது. அனுமதி அனைவருக்கும் இலவசம். நாள் நாளை சனிக்கிழமை (18-04-15) மாலை ஆறு மணி.
 
கேரளாவைச் சேர்ந்த ஹரி என்பவர் டீக்கடை நடத்தும் விஜயன் என்பவரைப் பற்றி எடுத்த ஆவணப்படம் முதலில் திரையிடப்படும். அதையடுத்து யாருக்காக அழுதான் திரைப்படம். ஜெயகாந்தனின் இயக்க ஆளுமையை தெரிந்துகொள்ள இது நல்ல சந்தர்ப்பம். சினிமா ஆர்வலர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்.

Share this Story:

Follow Webdunia tamil