Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் ஒன்றிணையும் எங்கேயும் எப்போதும் ஜெய், சரவணன்

மீண்டும் ஒன்றிணையும் எங்கேயும் எப்போதும் ஜெய், சரவணன்
, புதன், 2 ஏப்ரல் 2014 (15:38 IST)
எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணனும், அப்படத்தில் ஹீரோவாக நடித்த ஜெய்யும் மீண்டும் இணைகிறார்கள்.
எங்கேயும் எப்போதும் சரவணனுக்கு முதல் படம். அதையடுத்து விக்ரம் பிரபு நடிப்பில் இவன் வேற மாதிரி படத்தை இயக்கினார். அப்படமும் வெற்றி பெற்றது. சமீபத்தில் இவன் வேறமாதிரி 100 நாள்களை நிறைவு செய்தது.
 
விக்ரமுக்காக சரவணன் கதை செய்வதாக கூறப்பட்டது. ஆனால் ஜெய்யை வைத்தே தனது மூன்றாவது படத்தை இயக்குகிறார். 
 
இந்தப் படத்துக்கு தினேஷ் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார், எஸ்.கே.ஸ்டுடியோஸ் தயாரிப்பு.
 
ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
 
 

Share this Story:

Follow Webdunia tamil