Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இது சரியில்லை’ - தேசிய விருது விழாவை புறக்கணித்தது குறித்து இளையராஜா விளக்கம்

Webdunia
வியாழன், 5 மே 2016 (15:42 IST)
சிறந்த பின்னணி இசைக்காக மட்டும் எனக்கு விருது வழங்குவது என்னை பாதி மட்டுமே அங்கீகரிப்பதாகும் என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.

 

 

நியூ டெல்லியில் செவ்வாயன்று 63-வது தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
 
விழாவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் ராஜவர்தன்சிங் ரத்தோர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் சிறந்த நடிகருக்கான விருதை பிக்கு படத்திற்காக நடிகர் அமிதாப் பெற்றார். தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை கங்கனா ரணாவத் பெற்றுகொண்டார்.
 
சிறந்த படத்திற்கான விருதை பாகுபலி படத்திற்காக அப்படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும், தயாரிப்பாளர்கள் ஷோபு யர்லகட்டா, பிரசாத் தேவினேனி ஆகியோர் பெற்றுகொண்டனர்.
 
தமிழில் விசாரணை படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதை சமுத்திரக்கனியும், சிறந்த எடிட்டருக்கான விருதை மறைந்த கிஷோருக்காக அவருடைய தந்தையும் பெற்றனர். சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட விசாரணைக்கான விருதை தனுஷ், வெற்றிமாறன் சார்பில் சுரேஷ் பெற்றுகொண்டார்.
 
இளையராஜாவின் 1000வது படமான ‘தாரை தப்பட்டை’ படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு தேசியவிருது அறிவிக்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் இளையராஜா கலந்துகொள்ளவில்லை.
 
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள இளையராஜா, ‘’2010 வரை சிறந்த இசையமைப்புக்காக ஒரேயொரு தேசியவிருது வழங்கப்பட்டுவந்தது. சாகர சங்கமம், சிந்து பைரவி, ருத்ண வீணா என மூன்று படங்களுக்கு நான் தேசிய விருது பெற்றுள்ளேன்.
 
ஆனால் இம்முறை சிறந்த பின்னணி இசைக்காக மட்டும் எனக்கு விருது வழங்குவது என்னை பாதி மட்டுமே அங்கீகரிப்பதாகும். எனது இசையில் ஒரு பாதி மட்டுமே சிறப்பாக உள்ளது எனச்சொல்வதாகும்’’ என்று கூறியுள்ளார்.
 
மேலும், இது குறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த விருந்து வழங்கும் விழாவில் கலந்துகொல்லாததற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.
 
ஆனாலும் தேசிய விருது நிகழ்ச்சியை புறக்கணிப்பது இவருக்கு ஒன்றும் புதிதல்ல. 2010ம் ஆண்டு பழசிராஜா படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். அந்த விருதினையும் அவர் பெற்றுகொள்ளவில்லை.
 
பின்னனி இசை நன்றாக செய்பவர்களுக்கு பாடல்களை போட தெரியாதா? பின்னணி இசை, பாடல்களுக்கு என்று விருதினை தனியாக கொடுக்கிறார்கள் என்று தனது ஆதங்கத்தினை முன்பே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“என்னை மோசமாக சித்தரிக்க முயற்சி” - தனிப்பட்ட உரையாடலை எதிர்பார்க்கிறேன்.! ஆர்த்தி....

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘வேட்டையன்’.. டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

பழனி பஞ்சாமிர்தம் விவகாரம்: இயக்குநர் மோகன் மன்னிப்பு கேட்க நீதிமன்றம் உத்தரவு!

'மெய்யழகன்’ படத்தின் நீளம் குறைப்பா? நெகட்டிவ் விமர்சனத்தால் அதிரடி முடிவு..!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. ட்விட்டரில் வாழ்த்தாத ரஜினிகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments