Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'சர்கார்' படத்தின் கதை திருடப்பட்டதா?

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (17:34 IST)
பெரிய நடிகர்களின் படங்கள் குறிப்பாக விஜய் படங்கள் பிரச்சனைகளை சந்திக்காமல் சமீபகாலமாக வெளியானதாக சரித்திரம் இல்லை. ஆரம்பத்தில் இருந்தோ அல்லது கடைசி நேரத்திலோ ஏதாவது ஒரு பிரச்சனை, வழக்கு என விஜய் படத்திற்கு தடை கேட்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை வருண் ராஜேந்திரன் என்பவர் எழுதிய 'செங்கோல்' என்ற கதையின் காப்பி என்று தென்னிந்திய திரைக்கதை ஆசிரியர்களின் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சர்கார் படத்தின் கதை அப்படியே இந்த 'செங்கோல்' கதையின் மறுவடிவமாக இருப்பதாகவும் இதுகுறித்து வழக்கு தொடரவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் 'சர்கார்' படத்தின் டீசர் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2024-25ல் மட்டும் ரூ.120 கோடி வரி செலுத்திய அமிதாப் பச்சன்.. ஆச்சரிய தகவல்..!

திரையரங்கம் சிதறட்டும். பொடிசுங்களா கதறட்டும்.. ‘குட் பேட் அக்லி’ சிங்கிள் பாடல்..!

தெலுங்கு மற்றும் இந்தியில் கூலி படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா?

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ரித்து வர்மா… க்யூட் போட்டோஸ்!

கிளாமர் உடையில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments