திருமணமான ஹீரோ இளம் பெண்ணுடன் ஓட்டம்!

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (11:24 IST)
ரஜினி ரசிகர் மன்றத்தின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் பால நமச்சிவாயமும், அவரின் மைத்துனர் மணிமாறனும் சேர்ந்து புதுமுகங்களை வைத்து தயாரித்த படம் பயபுள்ள. 


 
இந்த படத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியை சேர்ந்த சிவா என்பவர்  அறிமுக  நாயகனாக நடித்திருந்தார். இவர் மனைவி குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வாழ்ந்துவரும் நிலையில்  மற்றொரு பெண்ணை காதலிப்பதாக கூறி மயக்கி அழைத்து சென்று விட்டதாக காவல் நிலையத்தில் அந்த பெண்ணின் பெற்றோர்கள் புகார் கொடுத்துள்ளனர். 


 
அந்த பெண்  பி.இ பட்டதாரி எனவும் கூறப்படுகிறது. நடிகர் சிவா  பயபுள்ள படத்தில் நடித்த பின்னர் பெரிய வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.


 
இதற்கிடையில் அந்த பெண்ணை மயக்கி புத்தாண்டுக்கு முன்பாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்ட சிவா, அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகின்றது.
 
இந்நிலையில் தற்போது அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 


மேலும் , ஏற்கனவே திருமணமான சிவா, தங்கள் மகளை மயக்கி அழைத்துச்சென்றதால், தங்கள் மகளின் எதிர்காலமே வீணாகி விட்டது என குடும்பத்தினர் வேதனை தெரிவித்ததோடு தங்கள் மகளை மீட்டுத்தரவேண்டி கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments