வழக்கத்துக்கு மாறாக வெள்ளிக்கிழமைக்குப் பதில் வியாழக்கிழமையில் இருமுகன் படத்தை வெளியிட்டனர்.
விக்ரம் நடிப்பு, ஆனந்த் ஷங்கர் இயக்கம் என்பதால் படத்துக்கு நல்ல கூட்டம். படம் முதல் நாளில் ஐந்து கோடிகளைத் தாண்டி வசூலித்தது. வெள்ளி, சனி, ஞாயிறுகளில் எப்படியும் கூட்டம் அம்மும். திங்கள்கிழமை ஒருநாள் மட்டுமே வேலைநாள். செவ்வாய்க்கிழமை பக்ரீத் பண்டிகை... விடுமுறை.
பொதுவாக ஒரு படத்துக்கு மூன்று நாள் ஓபனிங் என்றால், டைமிங் பார்த்து வெளியிட்டதால் இருமுகனுக்கு ஆறு நாள் ஓபனிங். இந்த ஆறு தினங்களில் படம் கணிசமாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இருமுகனுக்கு எழுதப்படும் விமர்சனங்கள் அத்தனை நேர்மறையாக இல்லை. அதனால், இந்த ஆறு தினங்கள் படத்துக்கு முக்கியமானது. போட்ட பணத்தை அதற்குள் எடுத்துவிடும் என்கிறார்கள்.