Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படப்பிடிப்புடன் தொடங்கிய கார்த்திக் சுப்பாராஜின் இறைவி

படப்பிடிப்புடன் தொடங்கிய கார்த்திக் சுப்பாராஜின் இறைவி
, வியாழன், 21 மே 2015 (12:03 IST)
கார்த்திக் சுப்பாராஜின் மூன்றாவது படம், இறைவி நேற்று பூஜையுடன் தொடங்கியது.
 
இறைவியை சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்டும், ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீனும் இணைந்து தயாரிக்கின்றன. விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில். இவர்களுடன் அஞ்சலி, கருணாகரன், காளி வெங்கட்.
 
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஷிவா விஜயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். 
 
இறைவியின் பூஜை நேற்று போடப்பட்டது. எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா ஆகியோர் இடம்பெற்ற காட்சிகளை நேற்று கார்த்திக் சுப்பாராஜ் படமாக்கினார். அவரது முந்தைய இரு படங்களைப் போல வித்தியாசமான கதை, திரைக்கதையுடன் இறைவி பிரமாண்டமாக தயாராகிறது.

Share this Story:

Follow Webdunia tamil