Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விதிகளை மீறியது அம்பலம்..? விரைவில் அறிக்கை! – விக்னேஷ் சிவன் – நயன்தாராவுக்கு நெருக்கடி!

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (10:53 IST)
விக்னேஷ் சிவன் – நயன்தாரா வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றது குறித்த விசாரணை நடந்து வரும் நிலையில் மருத்துவமனையிடம் விசாரணை நடந்து வருகிறது.

சமீபத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடந்து முடிந்திருந்த நிலையில், திருமணமாகி 4 மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக அவர்கள் பதிவிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர்கள் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதில் விதிமீறல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைத்த விசாரணை குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

ALSO READ: ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்பு! – முடிவுக்கு வந்த கொரோனா?

முதலில் வாடகைத்தாய் முறையில் விக்னேஷ்சிவன் தம்பதிக்கு குழந்தை பெற உதவிய மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டதில் விதிமீறல்கள் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை விசாரணை குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதை தொடர்ந்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியிடமும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என பேசிக் கொள்ளப்படுகிறது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments