Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனியா சேகரித்த 14 டன் நிவாரணப் பொருள்கள்

இனியா சேகரித்த 14 டன் நிவாரணப் பொருள்கள்
, செவ்வாய், 15 டிசம்பர் 2015 (11:43 IST)
மழை வெள்ள பாதிப்புக்கு நடிகைகள் கணிசமாக உதவியுள்ளனர். நடிகை இனியாவும் தனது பங்குக்கு 14 டன் நிவாரணப் பொருள்களை சேகரித்துள்ளார். அது குறித்து அவர் தெரிவித்ததாவது,


 
 
"நிவாரண உதவிக்காக ஒருசில அமைப்புகள் உதவி பொருட்களை சேகரிப்பதை அறிந்தேன். நானும் அவர்களுடன் சேர்ந்து அந்த பணியில் ஈடுபட்டேன். இதன் மூலம் 14 டன் பொருட்கள் சேகரிக்கப்பட்டது. அந்த பொருட்களை தேவையான இடங்களுக்கு அனுப்புவதற்காக பொருட்களை பிரித்து பார்சல் செய்ய வேண்டியது இருந்தது. நானும் தொண்டர்களுடன் இணைந்து பார்சல் செய்யும் பணியில் ஈடுபட்டேன். 4 நாட்கள் இந்த வேலையை செய்தேன்.
 
இது மட்டுமல்ல, மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, பாதிக்கப்பட்டவர்களை எனது சகோதரர் அழைத்து வந்து எங்கள் அடுக்கு மாடி குடியிருப்புகளில் தங்கவைத்தார். 3 நாட்கள் அவர்கள் தங்கி இருந்தனர். வெள்ளம் வடிந்த பிறகு அவர்கள் சொந்த இடங்களுக்கு சென்று விட்டனர்.
 
மழை பெய்த போது நான் துபாயில் இருந்ததால் நேரடியாக அவர்களுக்கு உதவ முடியவில்லை என்றாலும் என் சகோதாரர் என் சார்பில் இந்த உதவியை செய்தது நல்ல விஷயம். நிவாரண பொருட்களை சேகரிக்கவும், அனுப்பி வைக்கவும் நான் நேரடியாக உதவியது மனதுக்கு ஆறுதலாக உள்ளது" என அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil