Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (16:10 IST)
ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன் மற்றும் மியார் ஜார்ஜ் நடிப்பில் உருவான திரைப்படம் இன்று நேற்று நாளை. தமிழில் அதிகம் வராத டைம் டிராவல் வகையில் வந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது.

இந்நிலையில் அந்த படத்தின் பார்ட் 2 எடுக்க விரும்பிய தயாரிப்பாளர் சி வி குமார் இயக்குனர் ரவிக்குமாரை கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள சொன்னார். அவரின் இணை இயக்குனர் எஸ் பி கார்த்திக் அந்த படத்தை இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்னர் பூஜை போடப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.

இந்நிலையில் விரைவில் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று சொல்லப்படும் நிலையில் இந்த படத்தில் இருந்து நடிகர் விஷ்ணு விஷால் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அவர் ஒத்துகொண்ட படங்களில் நடித்து வருவதாலும், இந்த படத்துக்கான சம்பளப் பிரச்சனை காரணமாகவும், அவர் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெட்பிளிக்ஸ் கொடுத்த நெருக்கடியால்தான் விடாமுயற்சி சீக்கிரமே ரிலீஸ் ஆகிறதா?

கேம்சேஞர் படத்தால் பெரிய நட்டம்… தயாரிப்பாளருக்குக் கைகொடுக்கும் ராம்சரண்!

இயக்குனர் ராம் & மிர்ச்சி சிவா இணையும் ‘பறந்து போ’… சர்வதேச திரைப்பட விழாவுக்குத் தேர்வு!

துபாயை அடுத்து ஐரோப்பிய கார் பந்தயத்திலும் அஜித் சாதனை.. முதல் சுற்றில் வெற்றி..!

ஓடிடி யில் ரிலீஸானது விடுதலை 2.. கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments