Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால வரையரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் - தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு

Webdunia
செவ்வாய், 13 மார்ச் 2018 (16:44 IST)
ஏற்கெனவே அறிவித்தபடி காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
டிஜிட்டல் நிறுவனங்களின் அதிக கட்டணத்தை எதிர்த்து கடந்த 1ஆம் தேதி முதல் புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகிறது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். அத்துடன், வருகிற 16ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது. மேலும், சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இயக்குநர் சேரன், சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட 21 பேருக்கு கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சங்கத்தின் தலைவரான விஷாலும் கலந்து கொள்ளவில்லை. 
 
‘ஏற்கெனவே அறிவித்தபடி காலவரையற்ற போராட்டம் தொடரும். 16ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும். மேலும், 23ஆம் தேதி முதல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும்’ ஆகிய முடிவுகள் தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு  செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments