ஏ.ஆர். ரஹ்மானுக்கு அமெரிக்காவில் தமிழ் ரத்னா விருது
ஏ.ஆர். ரஹ்மானுக்கு அமெரிக்காவில் தமிழ் ரத்னா விருது
ஐநா சபையில் இசைக் கச்சேரி நடத்திய ஏ.ஆர். ரஹ்மானுக்கு அமெரிக்க தமிழ் சங்கம் தமிழ் ரத்னா விருது வழங்கி கௌரவித்தது.
இந்தியாவின் 70 -வது சுதந்திரதினத்தை முன்னிட்டு நியூயார்க்கிலுள்ள ஐநா பொதுசபை அரங்கில் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடந்தது. ஐநாவில் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குப் பிறகு இசை நிகழ்ச்சி நடத்திய இரண்டாவது இந்தியர் ரஹ்மான் ஆவார். இந்த இருவருமே தமிழர்கள் என்பது பெருமை.
இசை நிகழ்ச்சியை தொடர்ந்து அமெரிக்க தமிழ் சங்கம் சார்பில் ரஹ்மானுக்கு தமிழ் ரத்னா விருது வழங்கப்பட்டது. இதற்கு முன் இந்த விருதை பாரதிராஜா, பரதநாட்டிய கலைஞர் கமலா லக்ஷ்மன், கணிதமேதை ஸ்ரீனிவாச வரதன், இதய அறுவை சிகிச்சை நிபுணர் வளவனூர் சுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் பெற்றிருக்கிறார்கள்.